தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. ஆஸ்கர் விருதுக்காக ராஜமவுலி 80 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக தகவல் வெளியானது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் டிடிவி தனய்யாவிடம் கேட்டபோது அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். இந்நிலையில் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தனியார் youtube சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியின் போது ஆஸ்கார் விருதுக்காக செலவு செய்த தொகை குறித்து பேசி உள்ளார்.

அதாவது ஆஸ்கர் விருதுக்கான பரப்புரை செய்வதற்கு 5 கோடி ரூபாய் வரை செலவு செய்ய திட்டமிட்டு இருந்தோம். முதல் கட்டமாக 2 முதல் 3 கோடி ரூபாய் வரை செலவு செய்ய முடிவு செய்திருந்தோம். அதன் பிறகு நாமினேஷனுக்கு தேர்வானதால் பட்ஜெட்டை உயர்த்தினோம். கடைசியாக 8.5 கோடி ரூபாய் வரை செலவு செய்தோம் என கூறியுள்ளார் ‌