கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் தோள்சீலை 200-வது நினைவு ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது தமிழக முதல்வர் ஸ்டாலின் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசும் கேரள அரசு இணைந்து கொண்டாட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் என்று கூறினார்.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நிகழ்ச்சியில் பேசும்போது, கேரளாவில் மார்பு மறைக்கும் போராட்டமும் இந்த போராட்டமும் ஒன்றுதான். சீர்திருத்தத்திற்காக போராடிய ஐயா வைகுண்டர், திருவள்ளுவர், பாரதி, பெரியார் மற்றும் நாராயண குரு போன்றோரின் பங்கு அளப்பரியது. மேலும் கேரளாவில் நடைபெறும் வைக்கம் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்து கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துக் கொள்கிறேன் என்று கூறினார்.