செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், எடப்பாடி பழனிச்சாமி, மா.சுபிரமணியன் உடற்பயிற்சி பயிற்சியாளராக வலம் வருகிறார் என்கிறார். அது தவறு ஏதும் இல்லை, உண்மையை சொன்னதுக்கு  நன்றி. என்னை பொறுத்தவரை அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஆறு மணிக்கு என்னுடைய உடற்பயிற்சியை முடிப்பேன். முடிப்பது மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும்…  8 கிலோமீட்டர் தூரத்திற்கான ஒரு நடைபாதையை இன்றைக்கு அமைத்துக் கொண்டிருக்கிறோம்.

உலகத்திலேயே ஜப்பான் தலைநகரில் தான் எட்டு கிலோமீட்டர் தூரத்துக்கான நடை பாதை ஒன்று ”ஹெல்த் வாக்” என்கின்ற பெயரில் இருந்து கொண்டிருக்கிறது. நாம் நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறோம்… தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் 8 கிலோமீட்டர் தூரத்திற்கான நடைபாதையை ஏற்படுத்துவோம் என்று சொல்லி இருக்கிறோம்.

அந்த வகையில் இப்போது நான் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும்…  அதிகாலை 5 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் அந்த எட்டு கிலோமீட்டரை…. சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்,  மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர்களை அழைத்துச் சென்று…  அந்தப் பாதையில் இரு பக்கமும் மரங்கள் நடப்பட வேண்டிய அவசியம் குறித்தும்,  இருக்கையில் அமைக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும் அறிவுறுத்தி வருகிறோம். அந்த வகையில் நான் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் காலை 6:00 மணிக்குள் இந்த பணிகளை முடிக்கிறேன்.

எடப்பாடி பழனிச்சாமி அல்லது அவரோடு இருப்பவர்கள் எல்லாம்…  இந்த 4 – 6 வரை நிச்சயம் குறட்டை விட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். குறட்டையில் இருந்து அவர்கள் விழித்தெழுவதற்க்கே  10 மணி நேரம் ஆகும். 4  மணிக்கு நான் எழுந்து நடப்பது அவருக்கு ஆச்சரியம் அளிக்கிறது. 4 மணிக்கு எழுந்து நடப்பதற்கு ஊக்கப்படுத்துவது அவருக்கு வியப்பளிக்கின்றது. 4 மணிக்கு நான் எழுந்து எதிர்காலத்தில் நோய் நொடி இல்லாமல் மக்கள் இருக்க நடப்பது ஒரு சரியான உடற்பயிற்சி என்கின்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.