காட்டு யானையை ஒரு நபர் பல வகைகளில் கடுப்பேற்றும் வீடியோவானது  இணையத்தில் வைரலாகி வருகிறது. சாலை அருகே சென்றுகொண்டிருக்கும் ஒரு காட்டு யானையை ஒருவர் சீண்டி சிக்கலை இழுத்துக்கொள்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது. அதன்பின் தன் தலையிலேயே மண்ணை வீசிக்கொள்வது போன்ற ஒரு செயலை அவர் செய்கிறார்.

அவர் நீண்டநேரம் யானையின் முன் நின்று பல விதங்களில் கடுப்பேற்றுகிறார். உடனே யானை கோவமாக காலை உதறி தன் கால் அடியில் உள்ள மணலை வீசி எரிகிறது. எனினும் இது எதையும் பற்றி கவலைப்படாமல் அந்நபர் யானை முன் நின்று கடுப்பேற்றுகிறார்.