பல வருடங்களுக்கு உலகை உலுக்கிய எபோலோ வைரஸ் உகாண்டாவில் மீண்டும் பரவி வருகின்றது. உகாண்டாவில் மீண்டும் எபோலோ வைரஸ் பாதிப்பிற்கு 55 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டில் எபோலோ வைரஸ் பரவியது. இந்த நிலையில் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் கடந்த ஆண்டு செப்டம்பரில் பலருக்கு எபோலோ வைரஸ் பாதிப்பு உறுதியானது. பின்னர் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தது.

அங்கே தடுப்பூசி போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இன்று தலைநகர் கம்பாலாவில் எபோலோ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 113 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் 55 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலை இப்படியே நிலைத்தால் மோசமான நிலை ஏற்படும் என அந்த நாட்டு மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். தொற்று பாதித்த 113 பேரில் பாதி நபர்கள் இறந்துள்ளதால் உகாண்டாவில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.