திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் அருகே மகளிர் தினத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து வாகனத்தில் வந்த பெண்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் விழாவில் பங்கேற்றார். இதனையடுத்து அவர் அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து வாகனங்களில் சென்ற பெண்களுக்கு திருக்குறள் புத்தகங்களை பரிசாக வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பின்னர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணை தடுத்து நிறுத்தி இனிமேல் ஹெல்மெட் அணிந்து வருவேன் என பேப்பரில் எழுதி தரும்படி நூதன முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.