தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் புளியங்குடி எஸ்.வீராசாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இந்த முகாம் வருகிற 11+ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 8:30 மணிக்கு தொடங்கும். இதில் 150- க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்நிலையில் எழுத படிக்க தெரிந்தவர் முதல் முதுநிலை பட்டதாரி, ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். முக்கியமாக நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்ய வேண்டும். எனவே https:/tinyurl.com/tenkasi2023 என்ற கூகுள் படிவத்தில் சுய விவரங்களை பதிவு செய்து மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் டோக்கன் எண்ணுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் வேலை அளிப்போர் விவரங்களை அறிய https://www.decgctenkasi.com/mega.job.fair.2023 என்ற இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.