திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பேருந்து நிலையத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து கொடைக்கானல் மலைச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வத்தலகுண்டு நோக்கி சென்ற டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

மேலும் முன்பகுதியில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் கண்ணாடியை உடைத்துக் கொண்டு சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்து விட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த பயணிகளையும், 100 அடி பள்ளத்தில் கீழே விழுந்த பெண்ணையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.