தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் அமைந்துள்ள முண்டச்சி பள்ளம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி சுற்றி திரிகிறது. இந்நிலையில் அடிக்கடி காட்டு யானைகள் ஒகேனக்கல்- பென்னாகரம் சாலையை கடந்து செல்வதால் சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் மடம் வனத்துறை சுங்க சாவடியில் வைத்து வனத்துறையினர் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்தி காட்டு யானைகளின் நடமாட்டம் இருப்பது குறித்தும், வாகனங்களை நிறுத்தி செல்பி எடுக்க கூடாது எனவும் அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கின்றனர். அங்கு வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.