தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதுகரம்பு கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூர்த்திக்கு அவரது அக்காள் மகள் அம்பிகாவுடன் திருமணம் நடைபெற்றது. மேலும் மூர்த்தி சென்னையில் பேக்கரி மற்றும் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அம்பிகா புதுகரம்பு கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மூர்த்தி தனது மனைவியை சென்னைக்கு அழைத்து செல்வதற்காக புதுகரம்பு கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

அவர் வருவதற்கு முன்பே அம்பிகா தனது தாய் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்ததை பார்த்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அம்பிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.