திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவிக்கும் மேலே மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு போன்ற தேயிலைத் தோட்ட பகுதிகள் அமைந்துள்ளது. இங்கு யானை, மிளா, கரடி, மான் போன்ற வன விலங்குகள் இருக்கிறது. இந்த விலங்குகள் அவ்வபோது தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு வெளியே நடமாடும்.

இந்நிலையில் ஊத்து தேயிலைத் தோட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உலா வருகிறது. இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.