உத்தரபிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தில், மனைவிக்கு வேறு ஆணுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, சந்தேகத்தின் பேரில், கணவன் மனைவியை உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளி சிங் (கணவர்), சனிக்கிழமை இரவு கிராமத்தின் புறநகரில் உள்ள வைக்கோல் மாடிக்கு அருகே தனது மனைவி அஞ்சலியை (35) உயிருடன் எரித்துள்ளார்.

கருகிய உடலைக் கண்டு சம்பந்தப்பட்ட கிராம மக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அஞ்சலி-யின்  கணவர் சிங்கை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, தனது மனைவி வைக்கோல் மாடிக்கு அருகே வேறொரு நபருடன் தவறான உறவில் இருப்பதை கண்டதும் ஆத்திரமடைந்து, பின் அவருடன் சண்டையிட்ட போது ஏற்பட்ட ஆத்திரத்தில் இக்கொலையை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்துப் பெண்ணின் வீட்டார்  புகார் அளிக்க சிங் மீது  வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்தனர்.