செய்தியாளர்களிளிடம் பேசிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, OPSயை மட்டும் ஏன் நீங்க  சொல்றீங்க…  நான் எல்லாத்தையும் ஒன்னு சேக்கணும்னு பயணத்தில் இருக்கேன். அதனால எல்லாருமே அண்ணா திமுககாரங்கதான். அதனால வந்து எல்லாருக்கும் திரும்பத் திரும்ப சொல்றது என்ன ?    இரண்டு தலைவர்களுக்கும் உண்மையாக இருங்க, தொண்டர்கள் இருக்காங்க… தலைவர்கள் எல்லாம் இங்கே வந்திருக்கவங்க….

எல்லாருமே  ஒன்று சேர்ந்து போகணும். இது மக்களுக்கான ஆட்சியாக இருக்கணும். தலைவர் சொல்லிட்டு போனது அதான். அம்மா சொன்னது அதுதான். அதன் நிறைவேற்றனும்னாக்கு எல்லாருமே ஒன்னு சேரனும்.  திமுக என்கிற ஒரு தீய சக்தி அம்மா சொல்லுவாங்க…  அதை ஒழிக்கணும்னா இத செஞ்சாகணும்.

இது வந்து எல்லாருக்கும் தெரியும். ரோட்ல போறவங்களை கேட்டீங்கனாலும் அவங்களும் அதை தான் சொல்றாங்க. எல்லாரும் ஒன்று சேர்ந்தால் ஒரு சீட்டு வர முடியாது திமுக. அப்படின்னு சொல்றாங்க…  அதை நடைமுறைப்படுத்தணும் என்பது தான் என்னுடைய விருப்பம். நம்ம தலைவர்களுக்கும் நம்ம செய்யுற நன்றி கடன். அது மட்டுமல்ல பெரிய நன்றி கடன் தமிழக மக்களுக்கு, அதை நாம் செய்யணும்கிறது தான் என்னுடைய குறிக்கோள். என தெரிவித்தார்.