இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் பயனர்களை கவருவதற்காக புதுப்புது அப்டேட்டுகளை இன்ஸ்டாகிராம் கொண்டு வருகிறது. அதன்படி ஒருவருக்கு அனுப்பிய மெசேஜ்களை 15 நிமிடத்திற்கு உள்ளாக பயனர்கள் எடிட் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இது போன்ற அம்சம் ஏற்கனவே whatsapp மற்றும் telegram போன்ற செயலிகளில் இருந்த நிலையில், தற்போது இன்ஸ்டாவிலும் கொண்டுவரப்பட உள்ளது. இந்த அம்சம் பயனர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.