உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் மெசேஜை எடிட் செய்யும் வசதி தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது.

மெசேஜை தவறாக அனுப்பி விட்டால் அடுத்த 15 நிமிடத்திற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்திக் கொள்ளலாம். குறிப்பிட்ட இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே தற்போது கிடைக்கிறது. இதன் மூலம் மெசேஜ்களை மட்டுமே திருத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அப்டேட்டால் whatsapp பயனர்கள் குஷியில் உள்ளனர்.