தைப்பொங்கல் திருநாளில் பொங்கல் வைத்து சூரிய பகவான் உள்ளிட்ட இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே போல் உழவு தொழிலுக்கும் விவசாயிகளுக்கு பெரிதும் துணையாக இருக்கும் மாட்டிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கல் கிராமங்களில் மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பல கோவில்களில் கோ பூஜை வழி நடத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. மாட்டுப்பொங்கல் நாளில் நடைபெறும் கோ பூஜைகளில் கலந்து கொள்வது மகாலட்சுமியின் அருளை பெற்று தரும். இந்த மாட்டுப்பொங்கலை மாடு வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் இந்த நாளில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இது மத கொள்கையின்படி மாடு தெய்வத்திற்கு இணையாக வணங்கப்படுகிறது.

இது  மாட்டினை வருடத்திற்கு ஒரு நாள் சிறப்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே பொங்கல் திருநாளோடு சேர்த்து மாட்டுப் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. அதேபோல் மாடுகளை வைத்திருப்பவர்கள் மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை குளிக்க வைத்து, சலங்கை கட்டி, குங்கும பொட்டு வைத்து, அதன் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரிக்கின்றனர். மேலும் மாட்டு தொழுவத்தை  சுத்தம் செய்து கோலமிட்டு மாட்டுது அந்த பொங்கலை மாட்டிற்கு ஊட்டி மாட்டுப்பொங்கலை கொண்டாடுகிறார்கள். மாடு இல்லாதவர்கள் இந்த நாளில் முன்னோர்களை வழிபட வேண்டும். மாட்டு பொங்கல் அன்று சிலர் அசைவம் சமைத்து முன்னோர்களுக்கு படையில் இடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் பெரும்பாலானவர்கள் பாயாசம், வடை போன்றவற்றுடன் நமது முன்னோருக்கு பிடித்த உணவுகளையும் செய்து படைக்கின்றனர்.

மூன்று இலைகளில் படையல் இட்டு அவற்றுடன் வேட்டி, துண்டு, புடவை போன்றவற்றையும் சேர்த்து வைத்து வழிபட வேண்டும். நம்முடைய முன்னோர்கள் நற்கதி அடைய வேண்டும் என வழிபட்டு அவர்களின் ஆசியைப் பெற்று கடவுளின் ஆசியையும் பெறவேண்டும். இதனையடுத்து படையல் வைத்த ஆடைகளை வீட்டில் உள்ளவர்கள் உடுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால் யாருக்காவது தானமாக கொடுக்கலாம். மாட்டுப் பொங்கல் தினத்தன்று காமதேனுவையும், நந்தி தேவரையும் வழிபட வேண்டும். அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று நந்தி தேவரை வழிபடலாம். மேலும் காமதேனு இருந்தால் காமதேனுவையும் வழிபடலாம். மாட்டுப் பொங்கல் அன்று கோ பூஜை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதே போல் காகம், மாடுகள், நாய்கள் போன்றவற்றிற்கு உணவளிக்கலாம். அந்த வகையில் இந்த வருடத்தில் மாட்டுப் பொங்கல் ஆனது ஜனவரி 16 திங்கள்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பொங்கல் வைத்து வழிபாடு செய்து கொள்ளலாம். அந்த சமயங்களில் வழிபட முடியாதவர்கள் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பொங்கல் வைத்துக் கொள்ளலாம்.