தமிழர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானுக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை விவசாயிகளின் செல்ல பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. அவர்கள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை எடுத்து பொங்கலிட்டு சூரியனுக்கு வைத்து வழிபடுவார்கள். இதுவே பொங்கல் திருநாள் ஆகும்.

உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் வரவழைத்து விளையாட்டு போட்டிகள் வைத்து அன்று மிக முக்கியமான மகிழ்ச்சியான தருணங்கள் நடைபெறும். குறிப்பாக கபடி, வழுக்கு மரம், பானை உடைத்தல் போன்ற விளையாட்டுகளை விளையாடுவார்கள். இரவு நேரங்களில் ஆடல் பாடல் என்று ஊரே கொண்டாட்டத்தில் இருக்கும். பொங்கல் பண்டிகையானது போகி பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. போகி அன்று வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து வீட்டை தூய்மைப்படுத்துவதே போகிப் பண்டிகை.

இது பொங்கல் பண்டிகையின் முதல் நாள் ஆகும். தைப்பொங்கல் என்பது புது பானையில் புதிய அரிசியை போட்டு பொங்கல் இடுவார்கள். நெல் விளைய காரணமாக இருந்த கதிரவனுக்கு இந்த பொங்கலை படைப்பார்கள். தைப்பொங்கல் தமிழரின் தனிப்பெரும் விழாவாகும். மூன்றாவது நாள் மாட்டுப்பொங்கல் இந்த நாளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு சில இடங்களில் நடைபெறும். ஒவ்வொரு வருடமும் தை இரண்டாம் நாளில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. நான்காம் நாள் காணும் பொங்கல் இந்த நாளில் நண்பர்களும் உறவினர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் மூன்றாம் நாளில் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.