தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெரியசுவாமி புரம் பகுதியில் சூரங்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, மதுரையில் இருந்து வந்த, போலீசாரை கண்டதும் நிற்காமல் சென்ற காரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். பின், வாகனத்தை சுற்றி வளைத்து அதிகாரிகள் சோதனை செய்ததில், ஏராளமான கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

சென்னை கீழக்கரையை சேர்ந்த தர்மேந்திரன் மற்றும் தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த சிவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சூரங்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் மதுரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த எண்ணி 540 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

இந்நிலையில் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், மேலும் சிலர் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளார்களா ? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.