தில்லியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை சோப்பு தண்ணீர் நிரம்பிய சலவை இயந்திரத்தில் (வாஷிங் மெஷின்) தவறி விழுந்தது. இதையடுத்து அந்த குழந்தை மீட்கப்பட்டு சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் 19 நாள் போராட்டத்திற்கு பிறகு அதிசயமாக உயிர் பிழைத்த குழந்தை தற்போது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தாய் அறையை விட்டு வெளியில் சென்றபோது சலவை இயந்திரத்தின் மூடி திறந்திருந்ததால் சேரில் ஏறி குழந்தை தவறி அதில் விழுந்திருக்கலாம் என தாய் கூறி உள்ளார்.