தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் அருகே இருக்கும் கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றார் பெங்களூரில் தங்கி கூலி வேலை பார்ப்பதால் சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரித்த போது அதே பகுதியில் வசிக்கும் லெனின் குமார் என்பவர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அவர் குன்னூரில் சிறை வார்டனாக வேலை பார்த்து வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் லெனின் குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைகாக இருந்த லெனின் குமாரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.