அஜர்பைஜான் நாட்டின் பகு நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இளநிலை மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான போட்டியில், இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ரிதம் சங்வான்(19) பங்கேற்றார்.

இப்போட்டியில் அவர் தகுதிச் சுற்றில் 595 புள்ளிகள் சேர்த்தார். சென்ற 1994-ம் வருடம் பல்கேரிய வீராங்கனை டயானா லார்கோவா 594 புள்ளிகள் சேர்த்து இருந்ததே இதுவரையிலும் உலக சாதனையாக இருந்து வந்தது. அதை சங்வான் முறியடித்து உள்ளார். இதற்கு முன்பு 1989-ம் வருடம் ரஷ்ய வீராங்கனை நினோ சலுக்வத்ஜேவின் (593 புள்ளிகள்) சாதனையையும் முறியடித்து உள்ளார்.