லத்தி திரைப்படத்தை அடுத்து விஷால் இப்போது திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “மார்க் ஆண்டனி” படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஹீரோயினியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். அதோடு எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் சூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் விஷாலின் 34-வது படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் விஷாலின் 34வது படத்தை டைரக்டர் ஹரி இயக்க உள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. இ

ந்த போஸ்டர் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு முன்னதாக விஷாலின் தாமிரபரணி, பூஜை படங்களை ஹரி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.