தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் கார்த்தி. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியான நிலையில் 2-ம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ரிலீஸை முன்னிட்டு தற்போது பொன்னியின் செல்வன் 2 பட குழுவினர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது நடிகர் கார்த்தி பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதாவது நடிகர் கார்த்தி எங்கு சென்றாலும் உயிர் உங்களுடையது தேவி என்ற ஒரு வசனத்தை மட்டும் கூறி அரங்கில் இருப்பவர்களை அசத்தி விடுகிறார். இது குறித்து நடிகர் கார்த்தியின் மனைவி என்ன சொன்னார்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு கார்த்தி ரொமான்ஸ் இல்லாமல் படம் நடிக்க மாட்டீங்களான்னு கேட்பாங்க. ஈரோடுகாரர்கள் எல்லாம் இப்படி இருந்தால் என்ன பண்றது. ரொமான்ஸ் மட்டும் இல்லை என்றால் வாழ்க்கை போர் அடிக்காதா என்று சொல்லிப் பார்க்கிறேன். அதற்கு நிஜத்தில் மட்டும் ரொமான்ஸ் வர மாட்டேங்குது என்று சொல்லி கிண்டல் பண்ணுவாங்க என்று கூறினார். அதன் பிறகு பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து விட்டு வந்தியத்தேவன் எல்லாரையும் பார்த்து ரொம்ப சொல்ல விடுகிறார். ஆனால் ரொம்ப கண்ணியமா இருக்காங்கன்னு என் மனைவி ஒரு வார்த்தை சொன்னாங்க.

அது ரொம்ப பெரிய வார்த்தையா இருந்துச்சு. எங்க அம்மா கிட்ட ஒரு படத்துக்கான ரிசல்ட் வாங்குவது ரொம்ப கஷ்டம். எங்க அப்பா சிந்து பைரவி படம் பார்த்துவிட்டு ம்ம்ன்னு சொன்னாங்க. எங்க அண்ணனோட நந்தா படத்தையும் பார்த்துவிட்டு எங்க அப்பா அப்படித்தான் சொன்னாங்க. ஆனா எங்க அப்பா முதல் முறையாக பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு ரொம்ப சூப்பரா இருக்குன்னு சொன்னாரு. அதனாலதான் படம் இவ்வளவு பெரிய ஹிட்டு என்று கார்த்தி கூறினார். மேலும் நடிகர் கார்த்தி பேசியது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.