மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைனி மகாகாலேஸ்வர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோர் சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் பக்தர்களுடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், விராட் கோலி அவருடைய மனைவி அனுஷ்காவுடன் சேர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இதற்கு முன்பாக விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஆகியோர் தங்களுடைய மகள் வாமிகாவுடன் சேர்ந்து ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர். மேலும் தற்போது விராட் கோலி மற்றும் அனுஷ்கா இருவரும் கோவிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.