நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மாணவிகள் சார்பாக ஓணம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக வண்ண பூக்களால் பூக்கோலம் இட்டனர்.

இந்நிலையில் கல்லூரி பொருளாதார துறை உதவி பேராசிரியை ஷிபி என்னவளே அடி என்னவளே என்ற சினிமா பாடலை பாடி உள்ளார். அவர் பாட்டு பாடும்போது சக பேராசிரியைகள், மாணவிகள் கைதட்டி உற்சாகப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.