நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. நஞ்சப்பா சத்திரம் குடியிருப்பு பகுதியில் கூலி வேலை பார்க்கும் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று கடைக்கு சென்று விட்டு பழனிவேல் வீட்டிற்கு நடந்து வந்த போது புதர் மறைவில் இருந்து வந்த காட்டெருமை பழனிவேலை முட்டி தள்ளி தாக்கியது. இதனால் நிலைதடுமாறி பழனிவேல் கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பழனிவேலை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பழனிவேல் இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.