தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் எச் 3, என் 2 வைரஸ்கள் மக்களிடையே அதிகம் பரவி வருவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தமிழகத்தில் குளிர் தணிந்து  வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து வருகிறது. இந்த காலநிலை மாற்ற காரணத்தினால் வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உடல் வலி, சளி, இருமல், போன்ற தொந்தரவுகள் இருக்கிறது. அத்துடன் காய்ச்சல் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவுகிறது.

திடீரென பரவி வரும் இந்த வைரஸ் காய்ச்சலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே குரங்கம்மை, கொரோனா போன்ற பாதிப்புகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் இந்த வைரஸ் காய்ச்சல் மக்களை மீண்டும் இன்னலுக்கு ஆளாகியுள்ளது. இந்நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு வருகிற பத்தாம் தேதி வரை அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் சுமார் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.