நீலகிரி மாவட்டத்திலுள்ள ஆடுபெட்டு கிராமத்தில் 54 வயதுடைய கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொழிலாளி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆடுபெட்டு ஊர் தலைவர் விஜயன் தலைமையில் பெண்கள் உட்பட 30_க்கும் மேற்பட்டோர் கோத்தகிரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர் மீது தவறி இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பிறகு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.