புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்கு பொன்னம்பட்டியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சரவணன்(29) அதே பகுதியில் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த சரவணன் குடிபோதையில் அரளி விதையை தின்று மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சரவணன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.