கடலூர் மாவட்டத்தில் உள்ள அழிஞ்சிபேட்டையில் சீனு என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டா மாறுதலுக்கு மதலப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலரான பிரபாகரன் என்பவர் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சீனு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி சீனு ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பிரபாகரனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரபாகரனை கையும், களவுமாக கைது செய்தனர்.