கடலூர் மாவட்டத்தில் உள்ள அன்னவள்ளி ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் சென்று கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனையடுத்து கட்டுமான பொருட்களின் தரம் எப்படி இருக்கிறது என ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார். அவருடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார், குழுவில் இயக்குனர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.