தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகரில் ஒருவர் தளபதி விஜய். இவர் ரொம்பத் தெளிவானவர் என்று நினைத்தால், இப்படி இருக்கிறாரே என சினிமா ரசிகர்களிடையே பேச்சு வார்த்தை நடந்தது. அதாவது விஜய்யின் 50-வது படமாக சுறா படம் வெளிவந்தது. இதனால் அந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கிடையே இருந்தது. ஆனால் படம் பார்த்த விஜய் ரசிகர்கள் கடுப்பாகும் அளவுக்கு சுறா படம் மிக மொக்கையாக இருந்தது. இந்நிலையில் அந்த படம் பற்றிய ஒரு சுவராஸ்ய தகவல் வெளியானது. சுறா படம் கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எஸ்.பி. ராஜ்குமார் இயக்கத்தில் தளபதி விஜய், தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் திரைக்கு வந்தது.

இந்த சுறா படத்தில் நடிக்க விஜய் எப்படித் தான் ஒத்துக்கிட்டாரோ என ரசிகர்கள் பலரின்  கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. அந்த படத்தில் ‘டேய் அவன ஏன்டா தண்ணில போட்டுட்டு வந்தீங்க அவன் சுறாடா’ என்ற வசனத்தை இயக்குநர் சொன்னதால், அதை நம்பி இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக மனோபாலாவிடம் , விஜய் கூறியுள்ளார். அதை மனோபாலா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளதை கேட்ட ரசிகர்கள், கதை கேட்காமல் விஜய் எந்த படத்திலும் நடிக்க மாட்டாரே. அப்படிப்பட்டவர் இந்த  ஒரு வசனத்தை நம்பி அதுவும் 50-வது படத்தில் இந்த அளவுக்கு ஏமாந்து போயிருக்கிறார். இது ரசிகர்களுக்கிடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்