தளபதி விஜய் அவர்களுடன் தொடர்புடையவர்களின் சமூக வலைதளங்கள் அடுத்தடுத்து முடக்கப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் அவர்களின் திரைப்படம் வெளியாகும் நாள் அல்லது அதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாக ஏதேனும் ஒரு பிரச்சனை கண்டிப்பாக படம் சார்ந்தோ அல்லது தளபதி விஜய் அவர்களுக்கோ  ஏற்படுவது வழக்கம். இதுவரை வெளியான அனைத்து விஜய் படங்களும் பிரச்சனையை சந்தித்த பின்பே  திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில், நேற்றைய தினம் லியோ படத்தை தயாரிக்கும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் instagram பக்கம் சிறிது நேரம் முடக்கப்பட்டது. இது பெரிதளவில் பேசப்பட்டு வந்த நிலையில்,

இன்று தளபதி விஜய் அவர்களின் மேனேஜர் மற்றும் லியோ படத்தின் இணை தயாரிப்பாளர்  ஜெகதீஷ் அவர்களின் twitter பக்கம் மற்றும் தளபதி விஜய் அவர்களின் அடுத்த படமான தளபதி 68 படத்தை தயாரிக்கும் கல்பாத்தி அகோரம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான அர்ச்சனா கல்பாத்தி அவர்களின் ட்விட்டர் பக்கமும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் சமூக வலைதள பக்கம் இன்று லியோ  படத்திற்கான கோ புரொடியூசர் மற்றும் தளபதி விஜய் அவர்களின் அடுத்த படத்திற்கான ப்ரொடியூசர் அவர்களின் சமூக வலைதள பக்கம் என அடுத்தடுத்து தொடர்ச்சியாக விஜய் அவர்களை சார்ந்தவர்களின் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டு வருவதால் இது குறி வைத்து தாக்கப்படும்  சைபர் அட்டாக் ஆக கூட இருக்கலாம் என கணிக்கப்பட்டு பெரும் பரபரப்பை தற்போது ஏற்படுத்தியுள்ளது.