நடிகர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகி அபார வெற்றி கண்ட படங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

நடிப்பு அரக்கன் என அனைவராலும் அழைக்கப்படும் எஸ் ஜே  சூர்யா அவர்கள் பல வருடங்களாக சினிமா துறையில் பணிபுரிந்து வருகிறார். முதலில் இயக்குனராக அறிமுகமான எஸ் ஜே  சூர்யா பின்னாளில் நடிப்பிலும் ஆர்வம் காட்டி பல திரைப்படங்களில் நடிகனாக அவதரித்தார். அதில் பல படங்கள் அவருக்கான பாணியில்  செட்டாகி பெரும் வரவேற்பை மக்களிடையே அவருக்கு பெற்று தந்தது.  அதேபோல், எஸ் ஜே சூர்யா அவர்கள் ஓர் அதிர்ஷ்டசாலியாகவும், அவருடைய அபார நடிப்பு திறமையால் மக்களை கட்டி போடும் வல்லமை கொண்டவர் எனவும்  அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் சாதாரண வெற்றி அல்லாமல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளதாக குறிப்பிடுகின்றனர். அந்த வகையில்,

தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்திருப்பார். விஜய் அவர்களின் ரூ 250 கோடியை தாண்டிய முதல் படமாக மெர்சல் அமைந்தது. அதேபோல் மாநாடு திரைப்படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்திருப்பார். சிம்பு அவர்களின் முதல் 100 கோடி மற்றும் அவரது வாழ்நாள் கெரியரில்  அதிகமான வசூலை ஈட்டிய திரைப்படமாக  அது அமைந்திருந்தது. அதற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராக நடித்திருப்பார்.

இத்திரைப்படம் சிவகார்த்திகேயனின் சினிமா கெரியரில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விஷால் அவர்களுக்கு சிறந்த கம்பேக்  திரைப்படமாகவும், அவரது சினிமா கெரியரில் முதல் நாளிலேயே அதிக வசூலை ஈட்டிய     திரைப்படமாகவும்  இப்படம் அமைந்துள்ளது. மேற்கண்ட படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி கண்ட படங்கள். இவை அனைத்திற்கும் உள்ள ஒரே ஒற்றுமை அனைத்திலும் எஸ்.ஜே சூர்யா அவர்கள் நடித்திருப்பது தான். எனவே அவர் ஒரு அதிர்ஷ்டசாலியாகவும், அவரது நடிப்பு திறமையால் மக்களை கட்டி போடும் வல்லமை கொண்டவராகவும் திகழ்வதாக சினிமா வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.