தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாராவை நடு ரோட்டில் அழ வைத்தது குறித்து பேசியுள்ளார். அதாவது நானும் ரவுடிதான் படத்தில் நடிகை நயன்தாரா நடுரோட்டில் அழுது கொண்டே செல்வது போன்ற ஒரு காட்சி இருக்கும். இந்த காட்சியை படமாக்குவதற்கு பல டேக்குகள் போனதாம். அதாவது நயன்தாரா ரோட்டில் அழுது கொண்டே செல்லும்போது அதை பார்க்கும் ரசிகர்கள் உடனடியாக நயன்தாராவின் பின்னால் சென்று எதற்காக அழுது கொண்டே செல்கிறீர்கள் என்று கேட்பார்களாம்.

இதனால் அந்த காட்சியை எடுப்பதற்கு நீண்ட நேரம் ஆகியுள்ளது. இதன் காரணமாக ஆளில்லாத நடு ரோட்டில் நயன்தாராவை திடீரென வண்டியில் இருந்து கீழே இறக்கிவிட்டு அழுது கொண்டே செல்லுமாறு விக்னேஷ் சிவன் கூறிவிடுவாராம். படக்குழு நிறுத்துங்கள் என்று சொல்லும் வரை நயன்தாரா எதைப் பற்றியும் கவலைப்படாமல் அழுது கொண்டே செல்வாராம். மேலும் இந்த தகவலை பேட்டி ஒன்றில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் கதையில் ஏற்பட்ட சில முரண்பாடு காரணமாக அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.