இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், “கோவிஷீல்டு” தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் துவங்குவதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது “சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் துவங்குகிறது. இதன் வாயிலாக அடுத்த 90 நாட்களில் 6-7 மில்லியன் டோஸ்கள் கிடைக்கும்.

இளம் வயதுடையோர் மாஸ்க் அணிவதோடு, பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். சமீபத்திய தகவலின் அடிப்படையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இந்தியாவில் இப்போது கொரோனாவில் ஓமைக்ரான் திரிபுகளால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.