இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனே தெரிவிக்கவும் என பணியாளர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது.இதனைத் தொடர்ந்து மருத்துவர்களுக்கு சுகாதாரம் குறித்த விஷயத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். தொற்று பாதிப்பு ஏற்பட்டால் பணியிடத்தை விட்டு உடனடியாக வெளியேறுவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.