தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னண நாயகியாக வலம் வரும் சுருதிஹாசன் சினிமாவுக்கு வந்த புதுசில் இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தற்போது 60 வயதைக் கடந்த சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது சமூகவலைத்தளங்களில் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. அதாவது, பட வாய்ப்பு இன்றி நடிக்கிறாரா? (அ) அதிக சம்பளம் கிடைப்பதால் நடிக்கிறாரா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்புகின்றனர்.

இந்நிலையில் சுருதிஹாசனிடம் வயதான நடிகர்களுடன் நடிப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது சுருதிஹாசன் பதிலளித்து கூறியதாவது, ”நடிப்பு துறையில் வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே ஆகும். நடிக்கும் திறமை இருப்பின் உயிரோடு இருக்கும் வரை நடிக்கலாம். இதனை ஏற்கனவே பல வயதான ஹீரோக்கள் தங்களை விட 2 மடங்கு வயது குறைவான இளம் கதாநாயகிகளுடன் நடித்து நிரூபித்து இருக்கின்றனர். இதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கு அல்ல”என்று கூறினார்.