சூன் 20 கிரிகோரியன் ஆண்டின் 171 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 172 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 194 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1248 – ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் அரச அங்கீகாரத்தைப் பெற்றது.1631 – அயர்லாந்தில் பால்ட்டிமோர் நகரம் அல்சீரியாவின் கடற்கொள்ளையாளர்களால் சூறையாடப்பட்டது.

1685 – மொன்மூத் இளவரசர் ஜேம்சு ஸ்கொட் இங்கிலாந்தின் அரசனாகத் தன்னைத் தானே அறிவித்தார்.

1756 – பிரித்தானியப் படைவீரர்கள் கல்கத்தாவின் வில்லியம் கோட்டைக்கு அருகில் நவாபுகளினால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

1819 – அமெரிக்காவின் சவன்னா என்ற கப்பல் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை அடைந்தது. அத்திலாந்திக்கைக் கடந்த முதலாவது நீராவிக் கப்பல் இதுவாகும்.

1837 – விக்டோரியா பிரித்தானியாவின் பேரரசி ஆனார்.

1840 – சாமுவெல் மோர்சு தந்திக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1858 – இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.

1862 – உருமேனியாவின் பிரதமர் பார்பு கட்டார்ஜியூ படுகொலை செய்யப்பட்டார்.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேற்கு வர்ஜீனியா 35வது அமெரிக்க மாநிலமாக இணைந்தது.

1877 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக முறைத் தொலைபேசி சேவையை கனடா, ஆமில்ட்டனில் ஆரம்பித்தார்.

1887 – சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் மும்பையில் திறக்கப்பட்டது.

1900 – எதுவார்த் தோல் என்பவர் தலைமையிலான 20-பேர் கொண்ட குழு வடமுனைக்கான ஆய்வுப் பயணத்தை உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இக்குழு திரும்பி வரவேயில்லை.

1921 – சென்னையில் பக்கிங்காம், கர்னாட்டிக் ஆலைத் தொழிலாளர்கள் நான்கு-மாதப் பணி நிறுத்தத்தை ஆரம்பித்தனர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரான்சை ஊடுருவியது, ஆனால் இது தோல்வியில் முடிவடைந்தது.

1942 – பெரும் இன அழிப்பு: கசிமியெர்சு பைச்சோவ்ஸ்கி மற்றும் மூவர் சுத்ஸ்டாப்பெல் காவலர்களாக உடையணிந்து அவுசுவித்சு வதைமுகாமில் இருந்து தப்பிச் சென்றனர்.

1943 – அமெரிக்காவில் டிட்ராயிட் மாநிலத்தில் இனக் கலவரம் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் நீடித்த இக்கலவரத்தில் 34 பேர் கொல்லப்பட்டனர்.

1944 – சோதனை ஏவுகணை எம்.டபிள்யூ 18014 வி-2 176 கிமீ உயரத்தை அடைந்து வெளியுலகிற்குச் சென்ற முதலாவது மனிதனால் செய்யப்பட்ட பொருள் என்ற சாதனை படைத்தது.

1948 – கூட்டுப்படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு செருமனியில் இடாய்ச்சு மார்க் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1956 – வெனிசுவேலாவைச் சேர்ந்த லீனியா 253 விமானம் நியூ செர்சி, அசுபரி பார்க் அருகே அத்திலாந்திங்குப் பெருங்கடலில் மூழ்கியதில் 74 பேர் உயிரிழந்தனர்.

1959 – அரிதான சூன் மாத வெப்ப மண்டலச் சூறாவளி கனடாவில் சென் லாரன்சு குடாவைத் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர்.

1960 – மாலி கூட்டமைப்பு பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. இது பின்னர் மாலி, செனிகல் என இரண்டாகப் பிரிந்தது.

1973 – அர்கெந்தீனா, புவெனஸ் ஐரிஸ் நகரில் இடதுசாரிகள் மீது குறிசுடுநர்கள் சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர், 300 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

1990 – கல்முனைப் படுகொலைகள்: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனையில் இலங்கைப் படைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1990 – 5261 யுரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1990 – ஈரானின் வடக்கே 7.4 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 35,000–50,000 வரையானோர் உயிரிழந்தனர்.

1991 – செருமனியின் தலைநகரை பான் நகரில் இருந்து பெர்லினுக்கு மாற்றுவதற்கு ஆதரவாக செருமன் நாடாளுமன்றம் வாக்களித்தது.

1994 – ஈரானில் இமாம் ரேசா மதத்தலத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர், 300 பேர் வரை காயமடைந்தனர்.

2003 – விக்கிமீடியா நிறுவனம் புளோரிடாவின் சென். பீட்டர்சுபர்க் நகரில் ஆரம்பமானது.[1]

இன்றைய தின பிறப்புகள்

1760 – ரிச்சர்டு வெல்லசுலி, பிரித்தானிய அரசியல்வாதி, குடியேற்றத் திட்ட நிர்வாகி (இ. 1842)1861 – பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரிவேதியியலாளர் (இ. 1947)

1884 – மேரி ஆர். கால்வெர்ட், அமெரிக்க வானியலாளர் (இ. 1974)

1927 – கே. கே. பாலகிருஷ்ணன், கேரள அரசியல்வாதி (இ. 2000)

1939 – ரமாகாந்த் தேசாய், இந்தியத் துடுப்பாளர் (இ. 1998)

1941 – சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழத் திரைப்பட நடிகர் (இ. 2011)

1949 – கோட்டாபய ராஜபக்ச, இலங்கையின் 8-வது அரசுத்தலைவர்

1952 – விக்ரம் சேத், இந்திய எழுத்தாளர், கவிஞர்

1954 – சுந்தரம் கரிவரதன், இந்தியத் தானுந்து விளையாட்டு வீரர் (இ. 1995)

1967 – நிக்கோல் கிட்மேன், அமெரிக்க-ஆத்திரேலிய நடிகை

1970 – கானா பாலா, தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்

1971 – ஜோஷ் லுகாஸ், அமெரிக்க நடிகர்

1974 – லெனின் எம். சிவம், இலங்கை-கனடிய இயக்குநர், தயாரிப்பாளர்

1978 – பிராங்கு லம்பார்டு, ஆங்கிலேயக் கால்பந்து வீரர்

1984 – நீத்து சந்திரா, இந்திய நடிகை

இன்றைய தின இறப்புகள்

656 – உதுமான், அரேபிய கலிபா (பி. 577)1617 – முதலாம் இராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1552)

1837 – நான்காம் வில்லியம், ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் (பி. 1765)

1966 – ஜார்ஜஸ் இலமேத்ர, பெல்ஜிய இயற்பியலாளர், கணிதவியலாளர், மதகுரு (பி. 1894)

1971 – மகாகவி உருத்திரமூர்த்தி, ஈழத்துக் கவிஞர் (பி. 1927)

2005 – ஜாக் கில்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்., பொறியியலாளர் (பி. 1923)

2006 – சுரதா, தமிழகக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர் (பி. 1921)

2015 – ஆர். பிச்சுமணி ஐயர், தமிழக வீணை இசைக்கலைஞர் (பி. 1920)

இன்றைய தின சிறப்பு நாள்

உலக அகதி நாள்மாவீரர் நாள் (எரித்திரியா)