திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி சேர்ந்த சபீனா என்பவர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 15 பேருடன் ஒரு வேனில் சென்றுள்ளார். அந்த வேலை சாதிக் பாஷா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சேதுராப்பட்டி பிரிவு ரோடு அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலை நடுவே இருக்கும் தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சபீனா, கிருஷ்ணன், நிர்மலா உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.