வெங்கி அட்லூரி இயக்கத்தில் “வாத்தி” திரைப்படத்தில் தனுஷ் நடித்து முடித்து உள்ளார். இதில் நாயகியாக சம்யுக்தா நடித்துள்ளார். இந்நிலையில் இந்த பட விழா நிகழ்ச்சியில் தனுஷ் பேசியதாவது ”வாத்தி படத்தில் நடிக்க முடியாது என மறுக்க நினைத்தேன். ஆனால் கதையை கேட்டதும் பிடித்துப் போனதால் பின் நடித்தேன்.

இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் வாத்தியார் வேலை எவ்வளவு கஷ்டம் என்பது தனக்கு புரிந்தது. ஆசிரியர்கள் கையில் தான் மாணவர்கள் தலையெழுத்து இருக்கிறது. வடசென்னை 2ஆம் பாகம் எப்போது உருவாகும் என என்னிடம் கேட்கின்றனர். அதனை இயக்குனர் வெற்றிமாறனிடம் தான் கேட்கவேண்டும். ஆனால் வடசென்னை-2 படம் கண்டிப்பாக வரும்”என்று பேசினார்.