வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி தென்கொரியா மற்றும் அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வடகொரியாவின் அணு ஆயுத எச்சரிக்கையை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து தங்களின் ராணுவ பயிற்சியை விரிவுபடுத்தி வருகின்றனர்.

இரு நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வடகொரியா ஏவுகணைகளை ஏவி அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கா-தென் கொரியா இணைந்து கூட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். வருகின்ற 13-ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை இரு நாடுகளின் ராணுவமும் இணைந்து கூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.