இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை என்பது அதிகரித்துவிட்டது. இதில் அதிக நன்மைகள் இருக்கும் பட்சத்தில் இதனால் சில குறைபாடுகளும் இருந்து வருகின்றது. அதாவது அவசரமாக நாம் ஒருவருக்கு பணத்தை செலுத்த நினைக்கும் போது தவறுதலாக வேறொரு நபருக்கு அனுப்பி விடும் சம்பவங்களும் நடக்கின்றன.

இதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து பலரும் ஆலோசித்து வருகிறார்கள். இந்த நிலையில் தேசிய கொடுப்பனவு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், பயனர்கள் ஒரு நபருக்கு பணம் அனுப்புவதற்கு முன்னதாக பலமுறை சரிபார்த்து சோதனை செய்துவிட்டு அனுப்புவதை பரிந்துரைப்பதாகவும் இது தொடர்பான உதவி தேவைப்பட்டால் உங்களுடைய வங்கியை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.