உத்திரபிரதேச மாநிலம் மௌ என்ற இடத்தில் நிலம் தொடர்பான தகராறில் 60 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்:  இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் ஸ்ரீபதி யாதவ் என்ற 60 வயது முதியவர். ஸ்ரீபதி யாதவ் கான்பூர் கிராமத்தில் தனது வயலை உழச் சென்றபோது அவரது மருமகன்களான சுனில் மற்றும் கிர்த்தியால் தாக்கப்பட்டார். மாவ் மாவட்டத்தில் உள்ள சராய் லகான்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

நிலப் தகராறு:தாக்குதலின் பின்னணிக்கான காரணம்  நிலத் தகராறு என கூறப்படுகிறது. இந்த தகராறில் ஸ்ரீபதியின்  மருமகன்களான சுனில் மற்றும் கீர்த்தி ஆகியோர் ஸ்ரீபதி யாதவை கடுமையாக தாக்கியுள்ளனர்.

அபாயகரமான காயங்கள்:  தாக்குதலின் விளைவாக, ஸ்ரீபதி யாதவ் பலத்த காயம் அடைந்து  மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தப்பியோட்டம்:  தாக்குதலுக்கு காரணமான நபர்களான , சுனில் மற்றும் கீர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில், காவல்துறை அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து விரிவான விசாரணையை மேற்கொன்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.