விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 54 பஞ்சாயத்துகளில் வளர்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மண்ணுக்குமீண்டான்பட்டி கிராமத்தில் கால்நடை மருந்தகம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூபாய் 42 லட்சம் ஆகும்.

இந்நிலையில் யூனியன் துணைத் தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அதிகாரி ராமமூர்த்தி ஆகியோர் திடீரென பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஆய்வின்போது பஞ்சாயத்து தலைவர் மகாலட்சுமி பாலகுருசாமி, துணைத்தலைவர் முருகேஸ்வரி சேதுராஜ், பஞ்சாயத்து செயலர் செந்தில் வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.