பீகார் மாநிலம் பாட்னாவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு உணவகம் சிறைச்சாலை போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு மிகப் பெரிய உணவகமானது, சிறைக்கூடம் போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக 10 குளிர்சாதன வசதி கொண்ட சிறை அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறைக்குள் உணவருந்தும் மேஜை, நாற்காலிகள் இருக்கிறது.

அதோடு உணவருந்த வருபவர்களுக்கு கையில் விலங்கும் போடப்படுகிறது. வித்தியாசமான சூழலில் உணவருந்தி விட்டு வருவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். சில உணவகங்களில், உணவு பரிமாறுபவர்களுக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடையை வழங்கி இருக்கிறது. இந்த உணவகத்தை போட்டோ எடுப்பதற்காகவே பலர் வருகின்றனர்.