நாடு முழுவதும் பெண்கள் மற்றும் மகள்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. மத்திய- மாநில அரசுகள் பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது உங்களது வீட்டில் மகள் இருந்தால் அவர்களுக்கு ரூபாய்.5000 கிடைக்கும். மேலும் உங்களின் மகளுக்கு 18 வயதாகும் போது, ​​அரசானது ரூபாய்.75,000 வரை தரும். மகாராஷ்டிரா மாநிலத்தின் மகள்களுக்காக சிறப்பு திட்டம் ஒன்றை அம்மாநில அரசு துவங்கியுள்ளது.

இந்த திட்டத்தில் மகளுக்கு ரூபாய்.75,000 நிதி உதவி வழங்கப்படும். அம்மாநில அரசு 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் லேகி லட்கி திட்டத்தை துவங்குவதாக அறிவித்து உள்ளது. இதில் பெண் குழந்தை பிறந்த 18 வருடங்களுக்கு நிதியுதவி கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த லேகி லட்கி திட்டத்தின் படி, பெண்குழந்தை பிறந்தால் ரூபாய்.5000 வழங்கப்படும். அதன்பின் உங்களது மகள் முதல் வகுப்பில் பயிலும் போது, ​​அவர்களுக்கு ரூ.4000 கிடைக்கும்.

மற்றொருபுறம் உங்கள் மகள் 6-ம் வகுப்பு பயிலும் போது ரூ.6000 கிடைக்கும். அதோடு 11ம் வகுப்பில் ரூ.8000 வழங்கப்படும். 18 வயது அடந்தபின் மகாராஷ்டிர அரசிடமிருந்து ரூ.75 ஆயிரம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் மற்றும் ஆரஞ்சுநிற ரேஷன் கார்டு வைத்திருப்போர் மட்டுமே மகாராஷ்டிரா அரசின் இத்திட்டத்தின் பலனைப் பெறுவார்கள். பெண் குழந்தைகளின் கல்விக்காக அரசானது இந்த நிதி உதவியை வழங்கி வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தை பிறந்தது முதல் 18 வயது வரை மாநில அரசின் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.