அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணம். பள்ளி சேர்க்கை முதல் ரயில் டிக்கெட், சிம்கார்டு என அனைத்து விஷயங்களுக்குமே ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆதார் கார்டை எடுக்கும் பொழுது பல தவறுகளை மக்கள் செய்கிறார்கள். இந்த பிரச்சினைகளை சரிசெய்ய ஆதார் அட்டை புதுப்பிக்கும் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஆதார் அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை திருத்திக் கொள்ளலாம்.

ஆதார் அட்டை இன்று முக்கியமான ஆவணமாகிவிட்டது. ஆனால் ஆதார் குறித்து கவனமாக இருக்க வேண்டும். ஆதார் மோசடிகள் அதிகரித்து வருவதால், இந்தப் பிரச்சனைகளைச் சரிபார்க்க UIDAI ‘மாஸ்க்டு ஆதார் அம்சத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. தனிநபர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க UIDAI எண்களை மறைக்கும் வகையிலான ஆதார் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாஸ்க்டு ஆதார் அம்சத்திற்கு ஒருவர் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ ஐப் பார்த்து முழுமையான விவரங்களைப் பெறலாம்.