தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பலரது பாராட்டையும் பெற்றார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா கையில் ஒரு குழந்தையை வைத்திருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இந்த குழந்தை யார் என்று தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் மியா ஜார்ஜ் என்பவரின் குழந்தையை தான் நடிகை திரிஷா கையில் வைத்துள்ளார். மேலும் நடிகை மியா ஜார்ஜ் கடந்த 2020-ம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு ஆண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.