உயர் கல்வி நிறுவனங்களின் இட ஒதுக்கீடு தொடர்பான யுஜிசி அறிவிப்பிற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இட ஒதுக்கீட்டில் தகுதியானோர் இல்லாவிட்டால் பொதுப்பிரிவில் நிரப்பலாம் என யுஜிசி அறிவித்திருந்தது. யுஜிசி-யின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.